பக்கப் பக்கமா வசனம் கொடுத்தா, அதை ஒரே டேக்ல அசால்ட்டா பேசித் தள்ளுறதுல நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நிகர் அவர் மட்டும்தான். ஆனா, அப்படிப்பட்ட டயலாக் கிங் ஒரு படத்துல, வசனகர்த்தாவைப் பார்த்து “ஏன்யா இவ்ளோ நீளமா டயலாக் எழுதிருக்க?”-அப்படின்னு கேட்டார்னு சொன்னா நம்ப முடியுதா?
​ஆமா, நிஜமாதான்! ஒரு குறிப்பிட்ட சீனுக்காக அவர் அப்படி கேட்டார். அதுவும் யார் மேல தெரியுமா?
​வேற யாரும் இல்லை, நம்ம லெஜண்டரி வசனகர்த்தா ஆரூர்தாஸ் மேலதான்! அப்படி என்ன படம் அது? அந்த சீன்ல என்னதான் ஸ்பெஷல்?
​படம் வேற எதுவும் இல்லை, நம்ம தமிழ் சினிமாவின் எபிக் மூவியான ‘தெய்வமகன்’. ஷூட்டிங் ஸ்பாட்ல வழக்கம் போல ஆரூர்தாஸ் டயலாக்கை வாசிச்சுட்டே போறாரு. ஆனா அது நீளமா போய்ட்டு இருக்கு.
​கொஞ்சம் யோசிச்ச சிவாஜி, *”ஆரூரான்! என்னய்யா என்ன மெஷின்னு நினைச்சியா? இது ஒரு சீன் தானே, இவ்ளோ டயலாக் வச்சிருக்கியே?”னு கேட்டுட்டாரு.
​சிவாஜி அப்படி கேட்டதுக்கு பின்னால ஒரு பெரிய காரணம் இருந்துச்சு. அங்கதான் விஷயமே இருக்கு!
​அந்த சீன்ல சிவாஜி ஒரு கேரக்டர்ல நடிக்கல… அப்பா, ரெண்டு பசங்கனு மூணு கேரக்டர்ல மாத்தி மாத்தி நடிக்கணும்! ஒவ்வொரு ஷாட்டுக்கும் மேக்கப், ஹேர்ஸ்டைல், டிரெஸ்னு மாத்தி மாத்தி ரெடியாகிறது சாதாரண விஷயமா என்ன? அதனால, “டயலாக்கைக் குறை. நான் என் முகபாவனையிலயே உணர்ச்சிகளை கொண்டு வந்து இந்த சீனை முடிச்சுடலாம்னு”னு சிவாஜி நினைச்சிருக்காரு.
​ஆரூர்தாஸ் விட்டாரா?
​இப்போ ஆரூர்தாஸ் என்ன பண்ணியிருப்பார்? சரிங்க அண்ணேனு டயலாக்கை கட் பண்ணியிருப்பாரா?
​இல்லவே இல்லை! அங்கதான் ஒரு ரைட்டரோட மாஸ்டர் ஸ்ட்ரோக் வெளிப்பட்டுச்சு.
​அவர் ரொம்ப கூலா, *”அண்ணே, நீங்க சொல்றது சரிதான். உங்களோட கஷ்டம் எனக்குப் புரியுது. ஆனா தியேட்டர்ல உக்காந்துருக்க ஆடியன்ஸுக்கு அது தெரியாதுல? 20 வருஷம் கழிச்சு அப்பாவைப் பார்க்க வர்றான் ஒரு பையன். இத்தனை வருஷ பிரிவையும், வலியையும் எடுத்த உடனே சாதாரணமாக் பேசிட்டு போயிட முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சு உணர்ச்சிகள் வெடிச்சாதானே மக்கள் அதை ஏத்துப்பாங்க?”*னு ஒரு போடு போட்டாரு.
​அப்புறம் என்ன நடந்துச்சு?
​இதை கேட்டதும் சிவாஜியோட ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? அப்படியே ஒரு நிமிஷம் சைலண்ட் ஆயிட்டாரு. அந்த லாஜிக்ல இருந்த நியாயத்தை உணர்ந்துகிட்ட அந்த ‘நடிப்பு திலகம் ‘, அடுத்த செகண்ட் கேமரா முன்னாடி போய் நின்னார்.
அந்தக் கேள்விக்கான பதிலை ஆரூர்தாஸ் சொன்னதும், சரின்னு கேமரா முன்னாடி போய் நின்னாரு சிவாஜி.
​டைரக்டர் ‘ஆக்‌ஷன்’ சொன்ன அந்த செகண்ட்… அங்கே ஒரு பிரம்மாண்டமான மேஜிக்கே நடந்துச்சு! ‘இவ்வளவு நீளமான வசனம் தேவையா?’-னு கேட்ட அதே மனுஷன், ஒரு சிங்கம் மாதிரி சிலிர்த்துக்கிட்டு கேமரா முன்னாடி விஸ்வரூபம் எடுத்து நின்னாரு.
​அவரோட கண்ணுல தெரிஞ்ச அந்த வீரியம், ஒவ்வொரு வார்த்தையையும் அவர் உச்சரிச்ச விதம், குரல்ல இருந்த அந்த காந்தம், ஏத்த இறக்கத்தோட அவர் வெளிப்படுத்துன அந்த உணர்ச்சி… ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த அத்தனை பேரையும் அப்படியே ஆணி அடிச்ச மாதிரி நிக்க வெச்சுது. இத்தனை நீளமான வசனத்துல ஒரு இடத்துல கூட தடுமாறல, ஒரு வார்த்தை கூட பிசகல. அவரோட குரல் அந்த செட்டையே அதிர வெச்சுது!
​படம் ரிலீஸ் ஆகி அந்த சீன் தியேட்டர்ல விரிஞ்சப்போ, ரசிகர்கள் அடைஞ்ச பரவசம் இருக்கே… அது வார்த்தையால சொல்ல முடியாத ஒரு சரித்திரம்! அந்த வசனத்தை அவர் பேசி முடிஞ்சதும், சில செகண்ட்ஸ் தியேட்டரே கப்சிப்னு உறைஞ்சுபோய் இருந்துச்சு. அடுத்து வெடிச்சுது பாருங்க ஒரு கைத்தட்டல்… தியேட்டரோட கூரையே கிழிஞ்சுடுற அளவுக்கு ஒரு வெறித்தனமான கொண்டாட்டம்!
​சீட்ல உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் தங்களை மறந்து எழுந்து நின்னு, விசிலடிச்சு, அந்தப் பெருங்கலைஞனைக் கொண்டாடித் தீர்த்தாங்க.
ஒரு நடிகன், ரசிகனைத் தன்னோட கண்ட்ரோல்க்கு கொண்டு வர்ற அந்த மாயவித்தை அன்னைக்கு அங்கே அரங்கேறுச்சு.
​அன்னைக்கு அந்தத் திரையில அவர் செஞ்சது வெறும் நடிப்பு இல்ல; அது ஒரு கலைப் பிரளயம்! தலைமுறைகள் தாண்டியும் தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சுல நீங்கா இடம் பிடிச்ச அந்தச் சம்பவம், ‘நடிகர் திலகம்’-ங்கிற பட்டத்துக்கு அவர் மட்டும்தான் தகுதியானவர்னு உலகத்துக்கே சத்தமா சொல்லுச்சு.
​சுமார் 8 நிமிஷம் ஓடுற அந்த சீன்… அப்பா, வடுக்கள் நிறைந்த முகத்தோட இருக்கிற ஒரு பையன், இதுக்கெல்லாம் சம்மந்தமே இல்லாத இன்னொரு பையன்னு மூணு சிவாஜியும் திரையில பண்ணியிருக்கிற மேஜிக் இருக்கே… கூஸ்பம்ப்ஸ்!
​”தேவையில்லைனு நினைச்ச தந்தையும், அவரை தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிற காட்சி”னு ஆரம்பிக்கிற அந்த முதல் டயலாக்ல இருந்து கடைசி வரைக்கும் அருவி கொட்டுற மாதிரி உணர்ச்சிகரமான வார்த்தைகள் தெறிக்கும்.
​ஹாலிவுட்ல கோடிக்கணக்குல செலவு பண்ணி பிரம்மாண்டமா பல சீன்களை எடுக்கலாம். கிராபிக்ஸ்ல எதை வேணாலும் பண்ணலாம். ஆனா, வெறும் நடிப்பையும் உணர்ச்சிகளையும் மட்டுமே மூலதனமா வெச்சு, இப்படி ஒரு 8 நிமிஷக் காட்சியை இனி வருங்காலத்துல எந்தவொரு நடிகனாலும் திரையில கொண்டு வர முடியுமா?
முகநூலில் செந்தில்வேல் சிவராஜ்

https://www.facebook.com/share/p/18oZTsssqv/

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.