தேசியவிருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி.அஜித்குமார் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத்தொடரில் விஜய்சேதுபதி,மிலிந்த் சோமன், சுதேவ்நாயர்,முத்துக்குமார்,சிங்கம்புலி,கலைவாணி பாஸ்கர்,வி ஜே பார்வதி,ரிஷா ஜேக்கப்,வடிவேல் முருகன்,அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.

ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத்தொடரை விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய்சேதுபதி தயாரித்திருக்கிறார்.

மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் மார்ச் 25 அன்று நடைபெற்றது.இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில்….

முத்து என்கிற காட்டான் இணையதொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.கடந்த மூன்றுஆண்டுகளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன்.அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌இந்த முயற்சி ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்தகட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய்சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது.கதையின் முதல்அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும்.இது வித்தியாசமானது.
இந்தகுழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம்.பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது.விஜய்சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.
விஜய்சேதுபதியுடன் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம்.இதற்காக விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி.அவர்தான் இந்த இணையதொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார்,கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணையதொடர் நாடுகடந்து அனைத்து இரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் என்றார்.

ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத்தலைவர் பிரதீப் பேசுகையில்…..,

இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன்முதலாக சொன்னபோது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.அதன்பிறகு விஜய்சேதுபதியை சந்தித்தோம்.அப்போது அவர் இந்தகதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன்.எனக்கு இதைப்பற்றி நன்றாகத் தெரியும்.இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது.இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார்.ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம்.அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது.நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.
பணிகளை தொடங்கினோம்.ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது.இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்தபிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர்.இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..!என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய்சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டேன்.சிறிதுநேரம் யோசித்துவிட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள்.அங்கு கோடுபோட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன்பிறகு எதுவும் செய்யமுடியாது.இந்த சூழலை புரிந்துகொண்டு எங்களுக்கு இறுதிவரை உறுதுணையாக நின்றார் விஜய்சேதுபதி.இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்.
தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணையதொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்லமுடியும்.இந்தகதை தொடங்கும்போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான்.இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திரநடிகர் இதுபோன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள்.அதைசொல்லும் தைரியம் விஜய்சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது.அதுதான் இந்த இணையதொடரின் பிரம்மாண்டம்.அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்தபிறகு இந்தகதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்கமுடியாது.
அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் என்றார்.

இயக்குநர் – படத்தொகுப்பாளர் பி.அஜித்குமார் பேசுகையில்…..

விஜய்சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி.நான் முதலில் படதொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன்.முதல்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.பிரதீப் குறிப்பிட்டதைபோல் இதற்கு தடங்கல் ஏற்பட்டபோது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள்.ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது.அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக விஜய்சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.
இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும்திறமைசாலிகள்.ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தனர்.இதில் இடம்பெறும் சின்ன சின்னகதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.
இந்த இணையதொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது.இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து இரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம்.இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த இணையத்தொடர் அனைத்து தரப்பு இரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில்…..

இந்தமேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழில் தயாராகும் இணையதொடரில்,இதில்தான் முதன்முதலாக நடித்திருக்கிறேன்.இதற்காக விஜய்சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட்ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதிலும் குறிப்பாக இந்தகதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திரநடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது.இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது.இந்தப்படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது,அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும்,நேர்த்தியாகவும் அளித்தார். என்மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள்.அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில்….

விஜய்சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் பணியாற்றினேன்.அதன்பிறகு விஜய்சேதுபதி நடித்த
’96’படத்தில் பணியாற்றினேன்.இந்த ரெண்டுபடமும் ஹிட்.தற்போது மூன்றாவதுமுறையாக இணைந்து இருக்கிறோம்.இதுவும் வெற்றி பெறும்.
இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால்தான் கையாளமுடியும்.காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார்.அதில் இரண்டே கதாபாத்திரங்கள்தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய்சேதுபதி.‌அது ஒரு குறும்படம் போல் இருக்காது.திரைப்படம் போல் இருக்கும்.அதைப்பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன்.ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து இரசித்தேன் என்றேன்.இந்த இணையத் தொடரில் விஜய்சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார்.இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது.அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்றார்.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில்…..

திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்தபடைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில்…..

இந்தகுழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது.மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்கமுடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய்சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம்.ஆனால் திரைக்கதை நிறைவாகும்போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது.அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய்சேதுபதிதான்.படப்பிடிப்புதளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது.அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம் என்றார்.

கதாசிரியர் ஆர்.ராஜ்குமார் பேசுகையில்…..

இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது.இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர்.காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம்.ஒரு பத்து பதினைந்து ஆண்டுகால நண்பர்.அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவிசெய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவிசெய்வேன்.
இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது.இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம்.அதை விவாதித்து விரிவுபடுத்தலாம் என பேசத் தொடங்கினோம்.மாதக்கணக்கில் விவாதித்தோம்.தலை கிடைத்துவிட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளைகதைகளை உருவாக்கி,சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம்.இது ஒரு வகையான புதுமுயற்சி.இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.
நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம்.அந்தஅளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.
இந்தகதையை விஜய்சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம்.எந்த ஒரு மாஸ்ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் விஜய்சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌
இந்த இணையதொடர் ஒரு புதுமுயற்சி புதுமுயற்சியை எப்போதும் தமிழ் இரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றார்.

நடிகை அபி நட்சத்திரா பேசுகையில்….

இந்தபடைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தக்குழு மிகப்பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது.நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும்.விஜய்சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.இந்த இணைய தொடர் இரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றார்.

நடிகை வி ஜே பார்வதி பேசுகையில்,

இந்தநாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசியபோது நான் முதலில் நம்பவில்லை.அதன்பிறகு மணிகண்டனுடன் இணையவழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது.ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்துதான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள்,நான் நவீன உடையில் சென்றிருந்தேன்.அங்கு சென்றபிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரைபெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார்.எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்றபோதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன்.அதை நான் என்னுடைய பாக்கியமாகவும்,எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன்.விஜய்சேதுபதி – மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்றார்.

நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில்……

கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது.நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன்.ஆனால் இந்தமேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது.மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய்சேதுபதி சார்க்கும்
இந்த இணையதொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை…எதுவரை செய்யலாம்…எதை செய்யக்கூடாது…என்பதை எல்லாம் இதில் கற்றுக்கொண்டேன்.என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில்……

முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்ததருணம்வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம்.அனைத்தையும் கடந்து இன்று இந்த இணையதொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு பெரியநன்றி.
நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம்.ஆனால் அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கைதான் இதற்கு முக்கியகாரணம்.நான் இங்கு வந்தபிறகுதான் தெரிந்து கொண்டேன்.தமிழில் உருவான மிகப்பெரிய வெப்சீரிஸ் இதுதான் என்று.இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி.பிக்பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணையதொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.
ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார்.சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார்.நானும் சாய்ந்து அமர்ந்தேன்.நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்ககூடாது என்று பேசத் தொடங்கினார்.அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது.அவர் என்ன கேட்பார்? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன்.அவர் பிக்பாஸில் நீங்கள்தான் தொகுப்பாளராக பணியாற்றவேண்டும் என சொன்னார்.சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப்போகிறேன்.அதைபற்றி எனக்கு எதுவும் தெரியாது.நான் அதை பார்த்ததுகூட கிடையாது.சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப்பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.
இதுபோல் பல சமயங்களில்…இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்தநிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத..அறிமுகம் இல்லாத..ஏதோ ஒரு காரணத்தால் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது.என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.
ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும்போதுதான் எனக்கு தெரியவரும்’ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்யமுடியும்’ என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது.ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார்.இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள்.என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.இருக்கிறார்கள்.
இதுபோல் பலர் என்னை நம்பியதால்தான் நான் என்னை நம்பத்தொடங்கினேன்.அந்தவகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒருநாள் நடந்தது.அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அது இன்று இங்குவரை அழைத்து வந்திருக்கிறது.‌
மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும்.ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும்.இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும்..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிகவிரைவாக புரிந்துகொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கிவிடுவார்.சிலசமயங்களில் நடித்து முடித்தபிறகுதான் அவர் அந்தகாட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும்.அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.
2008 முதல் இப்போதுவரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும்.இந்த வெப்சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார்.இதற்காக அவருக்கு இந்ததருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்தபோது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார்.இந்த வெப்சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது..அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார்.இதற்காக அவருக்கும் நன்றி.
ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாதபோது அஜித்குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று ‘உடன்பால்’ படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டேன்.நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன்.என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.
இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்,நடிகர்கள்,நடிகைகள்,மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணையதொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.