ஏற்கனவே நான்கு பெரிய தெலுங்குப்படங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டு தவிக்கும் நயன் தாராவுக்கு தமிழ் இண்டஸ்ட்ரியின் கால்ஷீட் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம்.

சிம்பு நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பதாக இருந்த, ’வாலு’ பட பஞ்சாயத்திலிருந்து மீண்டு, சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள். அடுத்த அழைப்பு ஆஸ்கார் ஃபிலிம்ஸிடமிருந்து வர ஆரம்பித்துவிட்டது.

ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து, கல்யாண் இயக்கவிருக்கும், ‘பூலோகம்’ பட்த்துக்குத்தான் இந்த அழைப்பு.

அழைப்பது பெரிய கம்பெனியாச்சே, எப்படி தட்டிக்கழிப்பது என்று தெரியாமல், ’’தெலுங்கில் இப்போது சம்பளமாக படத்துக்கு இரண்டு கோடி வாங்கிக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? என்றாராம் நயன்.

இதைக்கேட்டு எந்தவித அதிர்ச்சியும் அடையாத தயாரிப்பாளர் தரப்பு ‘இரண்டென்ன, ’நான்கு’ கூட தருகிறோம். கூடவே இன்னொரு படமும் நடிச்சித்தரமுடியுமான்னு சொல்லுங்க’ என்றதாம்.

அந்த இன்னொரு படத்தின் பேரைக்கேட்ட நயன் ‘’டே அவனா நீ. எங்க போனாலும் என்ன விடமாட்டியா?’ என்று டென்சனாகி விட்டாராம்.

நம்ம நயன் கேர்ளு காதுல விழுந்த அந்தப்படத்தோட பேரு’வாலு’. யெஸ் தம்பி சிம்பு இப்ப நிக்’லருந்து ஷிஃப்ட் ஆகி ஆஸ்காருக்கு வந்து அஞ்சாரு நாளாச்சாமே?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.