kushboo-2

ஆனானப்பட்ட அஞ்சா நெஞ்சன் அழகிரியே அடக்கிவாசிக்கும், அடுத்த வாரிசு விவகாரத்தில், நெஞ்சுக்குள்ளே இருப்பதை அப்படியே வெளியிட்ட குஷ்பக்காவை இன்று சில திமுகவினர் வீடு தேடிச்சென்று குமுறி எடுத்தனர்.

இன்று காலை வெளியான விகடனில் குஷ்பக்காவின் துணிச்சலான பேட்டி வெளியாகியிருந்தது. அதில் தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் தான் என்று யார்சொன்னது? என்று ஜனநாயகரீதியான கேள்விகள் எழுப்பி சில வேள்விகள் நடத்தியிருந்தார்.
இதைப் படித்து கொதித்த ஸ்டாலின், காலையில் காபி கூட குடிக்காமல் கவலையுடன் காட்சி அளித்தாராம். இட்லி சட்னியுடன் வந்த மனைவியிடம் எரிந்து விழுந்தாராம். ‘அழகிரியையே ஜெயிச்சவன், கேவலம் ஒரு அழகி கிட்ட, அதுவும் பழைய அழகிகிட்ட தோக்குறதா? என்று அவரது மீசை துடித்ததாம்.
தலைவன் பட்டினி கிடக்கும் தகவல் தொண்டர்கள் மத்தியில் காட்டுப்பூவாய் பரவ, 17 பெண்கள், 14 ஆண்கள் கொண்ட பெருந்திரளான கூட்டம் ஒன்று பட்டினப்பாக்கத்தில் உள்ள குஷ்ஷக்காவின் வீட்டுமுன் இறங்கி, ட்விட்டரில் போடமுடியாத கெட்டவார்த்தைகளில் அர்ச்சனை செய்தனர்.இனியும் திட்ட வேறு கெட்டவார்த்தைகள் தமிழில் இல்லை எனும் நிலை வந்தபோது, அங்கிருந்த சில பல கற்களை எடுத்து அக்காவின் கார்களை நலம் விசாரித்ததாகத் தெரிகிறது.
அக்கா பழையபடி, அம்மா கட்சிக்கு போறதுன்னு முடிவெடுத்துட்டு இவ்வளவு டிராமாவும் போடுறார் என்கிறார்கள் மூத்த டிராமா நடிகர்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.