ratha-kanneer-drama-news

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா 1950 களில் மிகவும் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட ரத்தக் கண்ணீர் நாடகத்தை பெரும் எதிர்ப்புகளுக்கிடையே அரங்கேற்றினார். பல்லாயிரம் முறை மேடையேற்றப்பட்டிருக்கிற இந்த நாடகம் 1954ல் எம்.ஆர்.ராதாவே நடிக்க திரைப்படமாக வந்து பெரும் வெற்றிபெற்றது.

அதில் பணத்தையும், மேற்கத்திய கலாச்சாரத்தையும் பெரிதாகக் கருதும் ஒரு இளைஞனாக எம்.ஆர்.ராதா நடித்திருப்பார்.

எம்.ஆர்.ராதாவுக்குப் பின் அவரது மகன் எம்.ஆர்.வாசு இந்த நாடகத்தை பலமுறை நடத்தியுள்ளார். அவருக்குப் பின் அவரது மூத்த மகன் வாசு விக்ரம் இந்நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றினார். தற்போது அவர்களுடைய மூன்றாம் தலைமுறையாளரான எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ் இந்நாடகத்தை மீண்டும் கொண்டு வருகிறார்.

எம்.ஆர்.ராதாவின் வேடத்தை ஏற்று நடிக்க இருக்கிறார் சதீஷ். அவருடன் திரை நட்சத்திரங்கள் பலரும், மேடை நாடகக் கலைஞர்கள் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 12ஆம் தேதி சென்னையில் நாடகம் நடைபெற உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.