விஜய் மில்டனின் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்து உருவாகி வரும் படம் ’10 எண்றதுக்குள்ள’. படம் முடிவடைய இன்னும் 10 நாட்கள் க்ளைமாக்ஸ் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்கிறது.

நேபாளத்தில் பூகம்பம் ஏற்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட மிகச் சில படங்களில் ஒன்றாக 10 ஆகிப்போனது. நேபாளத்தில் பெரும்பான்மை காட்சிகள் எடுத்துவிட்டு படக்குழு திரும்பிய சில நாட்களில் பூகம்பம் வந்து ஆயிரக்கணக்கான மக்களை காவுகொண்டது. இன்னும் இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

படத்தில் காணப்படும் இடங்கள் பெரும்பாலானவை இப்போது சிதைந்தழிந்து போயிருக்கின்றனவாம். அந்த வகையில் அழிந்த நேபாளத்தின் அழகிய நிழலை பிடித்து வைத்த படமாக இது ஆகியிருக்கிறது.

Related Images: