அமீர்கான் நடித்த இந்தித் திரைப்படமான கஜினி, சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சாதிக் கான் “தொல்லைக்காட்சி” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராகிறார். இந்தத் திரைப்படத்தை கயலாலயா நிறுவனம் தயாரிக்கிறது.

மங்காத்தா, மேகா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்த அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி ஸ்ரீதரன் மற்றும் லொள்ளு சபா ஜீவா, மதுமிதா, மனோபாலா, மயில்சாமி போன்றோரின் நடிப்பில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது.

இதற்கு தரன் இசையமைக்க, மைனா, கும்கியின் படத்தொகுப்பாளர் எல்.வி.தாசன் படத்தொகுப்பில், சேகரின் கலை இயக்கத்தில், ராம்குமாரின் இணைதயாரிப்பில், கயலாலயா நிறுவனத்தின் சார்பில் ராஜா பாலசெந்தில் தயாரிக்கும் திரைப்படமான “தொல்லைக்காட்சி” காதல், சமூக பார்வை கொண்ட, நகைச்சுவை கலந்த ஒரு கிராமத்துக் கதையாக உருவாகி வருகிறது.

Related Images: