‘மாலை நேரத்து மயக்கம்’. நேற்றுகூட இந்தப் படத்தின் டீசர் வெளியானது. இயக்குநர் செல்வராகவனின் கதையை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் முதன்முறையாக இயக்கும் படம்தான் ‘மாலை நேரத்து மயக்கம்’ என வெளியில் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.
கதை, திரைக்கதை, வசனம் மட்டுமில்லை இயக்கமும் செல்வராகவன்தான். பெயருக்குதான் கீதாஞ்சலி. அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை செல்வராகவன் இப்படி செய்கிறார். ஒருவேளை மனைவி கீதாஞ்சலிக்கு நல்ல பெயர் வாங்கித் தர நினைக்கிறாரா இல்லை, தன்னுடைய பெயர் மேலும் டேமேஜ் ஆகிவிடாமல் இருக்க செல்வராகவன் இப்படி செய்கிறாரா தெரியவில்லை.
ஸ்கிரிப்டின் பிள்ளையார் சுழி முதல் ஷூட்டிங்கில் பூசணிக்காய் உடைத்ததுவரை எல்லாமே செல்வராகவன் தலைமையில்தான். இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள்கூட செல்வராகவனின் உதவி இயக்குநர்கள்தான்.
ஆனால், பேட்டிகளில் செல்வராகவன், “நான் வீட்ல குழந்தைங்களை பார்த்துக்கிறேன்.. என் வொயிஃப் ஷூட்டிங்கை பார்த்துக்கிறாங்க..” என பீலா விட்டுவருகிறார்.
ம்ம்.. என்னவோ போங்க..!

Related Images: