தன் கேரியரையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சீரழித்துவிட்டார் என்று  படம் வெளியான சமயத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஆனந்தி. காரணம் படத்தில் தன்னை ஆபாசமாகவும், மோசமான முறையில் காட்டியுள்ளதாக அப்போது குற்றம் சாட்டினார். பதிலுக்கு ஆனந்தியை திட்டினார் இயக்குநர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

படம் வெளியாக சில மாதங்களை கடந்த பிறகும் இந்தப் பிரச்னையை விடவில்லை ஆனந்தி.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கதை சொன்னபோது ஒரு அழகிய இளம்பருவ காதல் கதையாக இருந்தது. கிளைமாக்ஸ் சீனை படமாக்கியபோதுதான் அதுவொரு அடல்ட் காமெடி படம் என்பது தெரிந்தது. அதுவரை அப்படிப்பட்ட படம் என்று எனக்கு தெரியாது.

ஷூட்டிங்கிற்கு முன்புவரை, துணிச்சலான பெண் கதாபாத்திரம் என்றுதான் எனக்கு தெரிந்த விவரம். ஏற்கனவே நடித்த படங்களிலிருந்து இது வித்தியாசமானது என்று எண்ணினேன்.

முதலிலேயே இதுவொரு அடல்ட் படம் என்று தெரிந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். எனக்கு அடல்ட் காமெடி படங்கள் பிடிக்காது. மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க மாட்டேன்’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் காட்டமாக பேசினார் ஆனந்தி.

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலுக்கு வேறு காரணம் இருக்கிறது. த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா பட ஷூட்டிங்க் நடக்கும்போது ஏதோதோ சொல்லி தன் வலையில் ஆனந்தியை கவிழ்த்து பலமுறை காரியம் சாதித்துக் கொண்டாராம்  ஆதிக் ரவிச்சந்திரன். அவர் அந்த விஷயத்தில் வீக் என்பது தெரியவர ஆனந்திக்கு பெரிய ஆத்திரம். அது தான் அப்போது சண்டையாக வெளிப்பட்டிருந்தது. அந்த ஏமாற்றம் தான் ஆனந்தியை இதுவரை கொதிக்க வைத்து வருகிறது.

 

Related Images: