நடிகை பார்வதி நாயர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.  பின்னர் கமலுடன் உத்தம வில்லனில் நடித்தார். தற்போது எங்கிட்ட மோதாதே என்கிற படத்தில் நட்ராஜூக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அஜித்தின் தீவிர ரசிகையான பார்வதி, என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த போது அவரிடம் தான் அவரது ரசிகை என்று தெரிவித்தாராம்.  சந்தோஷப்பட்ட அஜித் இவரை அழகாக மாடல் ஸ்டைலில், தனது கேமராவில் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்து அசத்தினாராம்.

அதற்குப் பதிலாக அஜித்தின் ஓவியத்தை வரைய ஆரம்பித்திருக்கிறாராம் பார்வதி. பார்வதி ஒரு ஓவியர் என்பது திரையுலகில் பலருக்கும் புதிய செய்தி.

பெரிய அளவில் தயாராகி வரும் அஜித்தின் ஓவியத்தை முடித்த பின் அஜித்துக்கு அன்பளிப்பாக வழங்கப் போகிறாராம் பார்வதி.

Related Images: