சீயான் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படம் தியேட்டரில் பத்து என்றதுக்குள்ள ரீல் பெட்டி திரும்பி வந்துவிட்டதால் படு அப்செட்டாகி விட்டார். அவருக்கு அடுத்து படம் ஏதும் ஹிட் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் போதும் சேது என்று அவரை திரும்பவும் ரசிகர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

வயதாகிவிட்டாலும் இன்னும் ஹீரோயின்களை மரத்தைச் சுற்றி கட்டிப்பிடித்து ஆடும் படங்களை ஏன் விக்ரம் இன்னும் தேர்ந்தெடுக்கிறார் என்று புரியவில்லை. சிறந்த பாத்திரத் தேர்வு மற்றும் நடிப்பினால் மட்டுமே அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்து கிடைத்து ஸ்டார் வேல்யூ உண்டானது. அதை மறந்து விட்டு மரத்தடி டூயட் ஹீரோவாக மட்டும் அவர் மாற விரும்புவது அவரை எங்கே கொண்டு போய் விடுமோ?

தற்போது அவரது அடுத்த படத்தின் பெயர் ‘இருமுகம்’  என்று அறிவிப்பு வந்துள்ளது. ஆக்ஷன் ,த்ரில்லர் படமான இதை இயக்குபவர் அரிமா நம்பி படத்தை இயக்கிய அர்விந்த் சங்கர். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.  கலை இயக்குனர் முத்துராஜ்.  சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன். மலேசியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் முதல் கட்ட ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

Related Images: