ஜாக்கி ஷெராப் தமிழில் முதன் முதலில் நடித்த படம் ஆரண்ய காண்டம். அதில் லோக்கல் தாதவாக நடித்து அசத்தியிருப்பார் மனிதர். அதற்குப் பின் தமிழில் வேறு படங்கள் எதுவும் வரவில்லை. ஹிந்தியில் அவருக்கு இருக்கும் வேலையில் அவரும் அதை கண்டுகொள்ளவில்லை.

‘பீட்சா’, ‘தெகிடி’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களை தயாரித்த சி.வி.குமார் திடீரென்று இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயவன்’ படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜாக்கி ஷெராப்

 பிப்ரவரி 15ம் தேதி முதல் ‘மாயவன்’.படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னையில் நடைபெற்றது. நாயகனாக சந்திப் கிஷன் மற்றும் நாயகியாக லாவண்யா திரிபாதி நடித்து வருகிறார்கள். டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெ பி, மைம் கோபி, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் நலன் குமாரசாமி. கோபி அமர்நாத் ஒளிப்பதிவையும், லியோ ஜான் பால் எடிட்டிங் பொறுப்பையும் கவனித்து வருகிறார்கள்.

ஜாக்கி ஷெராப் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு வரும்  ஏப்ரல் 4ம் தேதி முதல்  சென்னையில் படமாக்கப்படவுள்ளன.

Related Images: