`மெட்ராஸ்` திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து தான் இயக்கிவரும் ரஜினியின் `கபாலி` குறித்து மனம் திறந்துள்ளார்.

`மெட்ராஸ்` படம் பார்த்துதான் ரஜினி எனக்கு `கபாலி` வாய்ப்பை வழங்கினார் என்றாலும் `கபாலி` என் வகையறா படம் அல்ல. இது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை மனதில் கொண்டு அவர்களது மசாலா ரசனைக்கான தீனியோடு உருவாகும் படம். ஆனால் சண்டைக்காட்சிகளை கூடுமானவரை தத்ரூபமாக எடுக்க முயன்றுள்ளேன்` என்கிறார் `கபாலி`ரஞ்சித்.

இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் தாணுவுக்கு 100 கோடிவரை லாபம் கிடைக்கும் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.

Related Images: