தனுஷ் கவுதம் மேனன் கூட்டணியில் இன்று படப்பிடிப்பு துவங்கப்பட்ட ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் நாயகியாகும் அதிர்ஷ்டம் மேகா ஆகாஷுக்கு அடித்துள்ளது. இவர் ஏற்கனவே ஜெயராமின் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘ஒரு பக்கக் கதை’ படத்தின் நாயகியாவார்.

துவக்கத்தில் ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங், த்ரிஷா,பார்வதி மேனன் ஆகியோரின் பெயர்கள் இப்படத்தில் இடம்பெறக்கூடும் என்ற யூகங்கள் இருந்தன. ஆனால் மேகா ஆகாஷ் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கவுதமின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை தனுஷ் தொடர்பான காட்சிகளுடன் தொடங்கிய ‘எ.நோ.பா.தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்துநாட்களுக்கு நாயகி இல்லாமலே நடைபெறும் என்றும், அடுத்து அவர் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவை வைத்து கவுதம் இயக்கி வந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை பாதியில் கிடப்பில் போட்டுவிட்டு இப்படத்தை கவுதம் துவங்கியிருக்கிறார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Related Images: