திரைப்படங்களில் நடிப்பதற்கான தடை மேலும் மேலும் நீடித்துவருவதால், நகைச்சுவை நடிகர் விரைவில் ஒரு வெப் சீரீஸில் நடிக்கவிருப்பதாக தொடர்ந்து வந்த செய்திகளை அவர் புண்பட்ட மனதுடன் மறுத்திருக்கிறார். அதையே சாக்காக வைத்து சில தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைத்த சீரியல் இயக்குநர்கள் மீதும் செம காண்டில் இருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய படங்கள் எதிலும் நடிக்கமுடியாமல் வீட்டிலும் ஆபிசிலும் காலாட்டியபடி காலம் கடத்திவரும் நடிகர் வடிவேலு குறித்த செய்திகளுக்கு மட்டும் பஞ்சமே இருந்ததில்லை.அவருக்கு புதிய படங்கள் கமிட் பண்ணிக்கொடுப்பது அடுத்த சில தினங்களில் அதே படத்திலிருந்து அவரைத் தூக்கியடிப்பது என்று செய்திகள் உருவாக்கப்பட்டு அவர் சின்னாபின்னப்படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாகவே அவர் வெப் சீரிஸ் ஒன்றில் பெரும் சம்பளத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருப்பதாகவும் யாரோ ஒரு புண்ணியவான் கொளுத்திப்போட, அடுத்து அச்செய்தி கட் அண்ட் பேஸ்டாகி வைரலானது. அதை நம்பிய சில சீரியல் இயக்குநர்களும்,…சின்னத்திரை சிங்கமே வருக’என்று அழைப்பு விடுத்ததாகவும் தெரிகிறது. நிலைமை கைமீறிப்போகிறது, அடுத்து விட்டால் யூடியூப் சீரியல் பார்ட்டிகளும் அழைக்கும் ஆபத்து இருக்கிறது என்று புரிந்துகொண்ட கைப்புள்ள வெப் சீரிஸ் செய்திக்கு வேதனையுடன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Related Images: