பெரிய சம்பளம், பெரிய ஹீரோவுக்கெல்லாம் ஆசைப்படமாட்டார் என்று நம்பப்பட்ட இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்குவதாக இருந்த பரோட்டா சூரி படத்தைக் கிடப்பில்போட்டுவிட்டு சூர்யாவுடன் இனைந்து படம் இயக்கவிருப்பதை தயாரிப்பாளர் எஸ்.தாணு சில நிமிடங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசுரன் படத்தின் வெற்றிக்குப்பின்னர் இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்து பல ஹேஸ்யங்கள் நடமாடின. அதில் அஜீத்,விஜய்,தனுஷ்,விக்ரம், இந்தி நடிகர் ஷாருக் கான், ரஜினி பெயர் உட்பட பலர் பெயர்கள் இடம்பெற்றன. ஆனால் அவர்து நண்பர்கள் வட்டாரமோ ‘வெற்றிமாறன் பணத்துக்காக வாக்குத் தவறாதவர்.ஏற்கனவே அறிவித்தபடி பரோட்டா சூரியை வைத்து படம் இயக்கிவிட்டுத்தான் அடுத்த படத்துக்குச் செல்வார் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில்,…அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations
தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.- S.Thanu @Suriya_offl @VetriMaaran என்று பதிவிட்டுள்ளார்.பாவம் பரோட்டா சூரி.

Related Images: