பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிவரும் ‘மூக்குத்தி அம்மன்’படத்துக்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்கவிருக்கிறார் என்று 70 எம் எம் ரீல் சுற்றப்பட்டுள்ள நிலையில் அவர் சரக்கு பார்ட்டி ஒன்றில் காந்துகொண்டு மட்டனையும் சிக்கனையும் வெளுக்கும் படங்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

தனது காதல் கணவரின் சொந்தத்தயாரிப்பான ‘நெற்றிக்கண்’படத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குநராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும்,அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன். இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டிவந்த நிலையில் அவர் கண்டிப்பாக விரதம் இருக்கப்போகிறார் என்று ரீல் விட்டிருந்தார் பாலாஜி.

ஆனால், சமீபத்தில் நயன்தாரா பதிவிட்ட புகைப்படம் ஒன்று நயன்தாரா விரதம் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்பது தெரியும். இந்த நிலையில் அங்கே அவர்கள் அசைவ விருந்தில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஸ்டேட்டஸ்ஸாக வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் டர்கிஷ் சிக்கன் அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நடிகை நயன்தாரா சிக்கனை வைத்து சில வேடிக்கை காட்டும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனால் அம்மன் விரதமெல்லாம் சும்மாவா என்று நயனை பலரும் நக்கலடித்து வருகின்றனர்.

Related Images: