பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராமன் எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (24.12.2019) இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் ராமன். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

இன்று சென்னை நகர் முழுதும் ராமனின் மரணம் இயற்கையானது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அவரது தர்கொலை செய்தி திரையுலக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Images: