விக்னேஷ் சிவன், நயன்தாரா கோஷ்டிகளுக்கு இணையாக தன் மனைவி மீது அன்பைப் பொழியும் புகைப்படங்கள் அவ்வளவையும் இணையதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வரும் இயக்குநர் அட்லி தன் மனைவி பிரியா விரைவில் வெள்ளீத்திரையில் மீண்டும் எண்டிரி கொடுப்பார் என்று அறிவித்துள்ளார்.

சீன்கள், கதைகளை அடுத்த படங்களில் சுட்டு,2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ , ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார் அட்லி.

இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற அட்லி, தன் மனைவியும் நடிகையுமான பிரியா குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: என் மனைவியின் திறமை என்ன என்பது எனக்கு தெரியும். கண்டிப்பாக அவர் விரைவில் திரும்ப நடிக்க வருவார். அவள் மிகவும் திறமைசாலி, அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன். அது கூடிய விரைவில் நடக்கும் ” என்று கூறியுள்ளார். மனைவி நடிக்கும் இந்த ஒரு படமாவது சொந்தக் கதையா இருக்கும்படி பாத்துக்கங்க பாஸ்.

Related Images: