அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் “வித்தியாசம்தான் அழகு”, “உலகம் பிறந்தது நமக்காக” என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் சூர்யா உட்படப் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது மேடையில் அகரம் அறக்கட்டளையினால் உதவி பெறும் காயத்திரி என்கிற சிறுமி தான் பெற்று வரும் உதவிகள் பற்றி நன்றி தெரிவிக்க பேசினார்.

கேன்ஸர் நோயால் தந்தை மரணமடைந்ததையும் அதற்குப் பின் படிப்பை தொடர முடியாமல் போனபோது அகரம் பௌன்டேஷன் எவ்வாறு உதவியது என்று தன்னுடைய வாழ்க்கை நிகழ்வைச் சொல்லி அழுதபோது மேடையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த சூர்யாவும் கண் கலங்கி அழுதார்.

அந்த வீடியோ கீழே..

YouTube player

Related Images: