அண்மையில் அஜீத் புகைப்படத்தை வைத்திருக்கும் டிவிட்டர் பதிவொன்றில் மிக ஆபாசமான கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றது.சும்மா ஆடித்தீர்க்கும் கஸ்தூரி, அதற்கு பதிலளிக்கும் விதமாக… மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க…அஎன்று பதிவிட்டிருந்தார்.

அத்தோடு நில்லாமல், அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிட மாட்டார்கள் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வார்த்தை யுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ‘அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Images: