ஒரு முறை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம்…

“ஏன் புதிய இயக்குநர்களின் படங்களில் நடக்கிறீர்கள்?? அதனாலயே சில படங்கள் ப்ளாப் ஆகி விடுகிறதே??” எனக் கேட்டாராம் !!
அதற்கு விஜய் சேதுபதி…

“இல்லடா !! வாய்ப்பு கிடைக்காம பல வருசமா கஷ்டபடறாங்க,,,சரி நாம எதாச்சும் உதவி பண்லாம்னு தான் அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கறேன்… 10 படம் ஹிட்’ஆகறக்கு நடிச்சா, ஒரு படம் இந்த மாதிரி மனத்திருப்திக்கு நடிக்கறேன்.. அது பிளாப் ஆனாலும் எனக்கு கவலை இல்லை.. ஒரு வேளை ஹட் ஆச்சுனா, ஒரு கஷ்டபடற பையனுக்கு லைப் கிடைச்ச மாதிரி இருக்கும்” என்றாராம் !!

அதே போல சமீபத்தில் காலா’வில் ரஜினியின் மகனாக நடத்த மணிகண்டன் (காலாவில் லெனின்) அவரின் ஒரு பேட்டி பாத்தேன்…

“காதலும் கடந்து போகும்” பட சூட்டிங்கப்ப என் தங்கச்சி காதுல ஒரு ஆபரேசன் பண்ணனும்.. கைல காசு இல்லனு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிட்டு போனேன்.. நான் தங்கச்சியோட ஹாஸ்பிடல்ல இருந்தப்ப ஒரு போன் வந்துச்சு.. “மணி நான் தான் சேதுபதி பேசறேன்.. தங்கச்சிக்கு ஆப்ரேசன்னு கேள்வி பட்டேன்.. நான் பூந்தமல்லி பக்கத்துல தான் இருக்கேன்.. பணம் எதாவது தேவைனா சொல்லு வந்து கொடுத்துட்டு பேறேன்னு சொன்னார்.. அந்த படத்துல எல்லாம் நான் ஒரு சாதாரண ரோல் நடிக்கறவன்.. என்னை மதிச்சு என்கிட்ட பேசனும்னு அவசியமே இல்ல… ஆனால் அவர் பேசினார்” என்றார்.

லோகேஷூடன் மருத்துவமனையில் விஜய் சேதுபதி.

அதே போல சில தினங்களுக்கு முன் ” நானும் ரவுடி தான்” படத்தில் ஒரு வேடத்தில் நடித்த லோகேஷ் என்பவருக்கு பக்கவாதம் வந்துவிட்டது… மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் கஷ்டபடுகிறார் என செய்தி வந்தது…

இன்று அவரை நேரில் போய் சந்தித்து மருத்துவ செலவுக்கான தொகையை வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி…

”எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. பெரியாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்”னு சில இடங்களில் பதிவு செய்துள்ளார் விஜய்சேதுபதி !!

வெறென்ன சொல்ல !!

மனுசன் 🖤🖤🖤

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.