இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்பே கணித்ததாக அபிக்யா ஆனந்த் என்கிற கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவன் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் சிறுவன் பேசிய வீடியோ கீழே..
அபிக்யா ஆனந்த் ராகு கேது மற்றும் சனி, வியாழன், செவ்வாய் மூன்று கிரகங்கள் நேர்கோட்டில் வருகின்றன என்று ஜோதிடத்தை வைத்து பேசியிருந்தான். அதே போல 2020 கடைசியிலும் இன்னொரு பெரும் ஆபத்து உலகத்துக்கு வருகிறது என்று சொல்லியிருக்கிறானாம். வழக்கமாக ஜோதிடர்கள் சொல்வது போலவே இந்தப் பையனும் பேசியிருக்கிறான்
அபிக்யாவின் உடையும், முடியமைப்பும் அவன் பேசும் விஷயங்களும் ஜோதிடம் என்கிற பொய்யை பிராமணியம் உயர்த்திப்பிடிக்கும் அடையாளமாக இருக்கின்றன.
அவனுடைய ஜோதிட முன்னறிவிப்பு அறிவியலற்ற வெற்றுத் தன்மையானது என்பதை விவாதிக்கிறார் கீழே..