40 ..நாட்கள்..நடந்தும் ..
உன் ..நடை முடியவில்லையே ..என்று ..
நம்பிக்கை ..இழந்து விடாதே ..
உன் தேசம்..அவ்வளவு பெரியதென்று..பெருமை கொள்

நாங்கள் ..சிந்தனையின் உச்சத்தோடு..
கொரோனா யுத்தத்தை..கூர்மை படுத்தி..இருக்கிறோம்
உலகில் ..முதல் முறையாக..முப்படைகளையும் ..
கொரோனா போரில் ..ஈடுபடுத்திய ..ஒரே தேசம் ..
எனும்..ஈடற்ற பெயரை ..ஈட்ட போகிறோம் ..

வயிற்றை ..இறுக்கி பிடித்துக்கொண்டு
நிமிர்ந்து ..வானத்தை பார்
உன் வயிற்றில் கேட்கும் ..சத்தத்தை விட
வானத்தில் கேட்கும் ..சத்தம் அதிகமாயிருக்கும்
அவசியம் கேள்..கொரோனா போர் பரணி..அதிரும் ..
தேசிய ..வெ(ற்)றி ..பேரானந்தம்..பீறிட்டு எழும்!
மாடிகளில் கூடி …தின்று ..கொழுத்திருக்கும்..
தேசபக்தர்கள் ..தீவிரமாய் கூக்குரல் எழுப்புவார்கள்

வயிறு வதங்கி ..நடை தளர்ந்து
குழந்தை குட்டிகளோடு ..அலையும் உனக்கு
விமானங்களில் இருந்து ..வீசப்போவது
அற்ப ..ரொட்டி துண்டுகள் ..அல்ல.. அத்தனையும்..
கொரோனா மீதான..அற்புத தேசபக்த..யுத்த குண்டுகள்

ஆனால்..
நீ ..நடந்திருக்கும் தொலைவுக்கு ..
இப்போது ..நிமிர்ந்து பார்க்கும் ..நிலையில்
நீ ..இருக்க மாட்டாய் ..இருந்தாலும்
நீ ..உன் தேசபக்தியை .. நிரூபிக்கவேண்டிய ..நேரமிது

பசியால் ..நிற்க..இயலவில்லையென்றாலும்..
உனக்கு..நாங்கள்தான் யோகா..கற்றுத்தந்திருக்கிறோமே!
மல்லாந்து ..படுத்துக்கொள் ..
வற்றிய விழிகளால் ..வானத்தை பார்
தேசபக்த ..பெருமித ..பேரிரைச்சலோடு ..
வசந்த பூக்கள் ..உன் வயிற்றின் மீது ..கொட்டும் ..

அக்கணம் ..என்ன ஒரு ..பெருமைமிக்க ஆட்சியை ..
நீ ..பெற்றிருக்கிறாய் ..என்று ..கர்வம் எழும் ..அதில்
இனி..காலம் முழுதும்..நீ உண்ணாமலே நடக்கலாம்

முக்கியமாய் ..ஒன்று
பகுத்தறிவாளர்களோடு மட்டும் ..சேராதே
அவர்கள் ..தேச விரோதிகள் ..
விமானத்திலிருந்து..பூ..போட்டு வித்தை காட்டுவதைவிட
வீதியில் தவிப்போரின்..வயிற்றுக்கு சோறு போடலாமே?
விண்ணில் ..விமானம் ..பறந்தால் ..
மண்ணில் ..எப்படி வேதனைகள் ..தீரும்?
என்றெல்லாம் ..வினா எழுப்புவார்கள்! …

கூடவே..மனிதமற்ற ..மாட்டு மூளைகளின்..அதிகாரம்..
இப்படித்தான் இயங்கும்..என்று ஏகடியம்..பேசுவார்கள்
அதை விட ..ஆபத்தான ஒன்றை ..செய்வார்கள்
நீ ..மிக எச்சரிக்கையாய் ..இருந்திட வேண்டும் ..
ஆம் ..உன்னை ..சிந்திக்க சொல்வார்கள்!

இறுதியாய் ஒன்று ..
பக்கத்துக்கு வீட்டுக்காரரை..பத்திரமாய் பார்த்துக்கொள்
ஓ ..நீ ..இன்னும் ..வீடே போய் ..சேரவில்லையா?
வீதியில்தான் ..நடந்து ..கொண்டிருக்கிறாயா?..சரி ..சரி
நீ ..நடப்பதை ..நாங்கள் கண்டு கொள்ளமாட்டோம்
நாங்கள் ..நடத்துவதை ..நீ ..கண்டு கொள்ளாதே
தேச பக்தியோடு இரு..அதுதான்..தேசத்துக்கு நல்லது..
‘தேசப்பித்தோடு’ …இருந்தால்..அதைவிட ..நல்லது

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.