அடுத்த ஆண்டு திரைப்பட சேவைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு உலகம் முழுக்க பைக் ரேஸ் வலம் வர தல அஜீத் முடிவெடுத்துள்ளதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படங்களில் நடிப்பது தவிர்த்து கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்பது, பைக்கில் நீண்டதூரம் பயணம் செய்வது ஆகியவற்றில் பெரும் ஈடுபாடு கொண்டவர் அஜீத் என்பது இந்த தமிழக மகா ஜனங்கள் அறிந்த சங்கதி. இடைப்பட்ட காலத்தில் இந்த சாகசங்களின்போது ஒரு சிறிய விபத்தை சந்தித்த வர் பின்னர் அதைத் தொடரவில்லை.

ஆனால் சமீப காலமாக, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள அவர், வலிமை படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைத்தபோது பைக் ரைடிங் சென்றுள்ளார். பைக் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியைப் படமாக்க ரஷ்யா சென்றபோது அங்கும்கூட ரைடிங் சென்ற அஜித்குமாருக்கு, திடீரென பைக்கில் உலகம் சுற்றி வர வேண்டும் என்று ஆசை துளிர்விட்டுவிட்டது.

அஜீத்தின் அந்த மைண்ட்வாய்ஸை சரியாகக் கேட்ச் பண்ணிக்கொண்டு, அவர் ஆசைப்படுவது போன்று தன் பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யாசர்லூ என்கிற பெண் டெல்லிக்கு வந்திருக்கிறார். அவரது வருகையால் மகிழ்ந்த அஜீத், டெல்லிக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாரல் தன் பைக்கில் 64 நாடுகளைக் கடந்திருக்கிறார் என்ற தகவல் அஜீத்தை இன்னும் அதிக உற்சாகத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

எதிர்காலத்தில் தன் பைக்கில் உலகத்தைச் சுற்றிவரும் திட்டத்தில் இருக்கும் அஜித், அந்தப் பெண்ணிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜித்தின் ஊடக தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் தன் உலகப் பயணத்தை அஜித்குமார் தொடங்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் என்ன என்ன விரைவில்? வரும் ஆண்டிலேயே இப்பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள அஜீத் 2022 முழுமையும் திரையுலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ‘23ல் தான் அடுத்த படத்தைத் தொடங்குவார் என்று செய்தி கிளப்பப்படுகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.