கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இப்போது குரல்பதிவு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.படத்துக்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகனின் மகன் அஜிதன் குரல்பதிவைக் கவனித்துக் கொண்டிருக்கிறாராம்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய்க்கு சின்மயி குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என படக்குழு நினைத்திருக்கிறது.

சின்மயிக்கு டப்பிங் யூனியன் சிக்கல் இருப்பதால் அவரைப் பேச வைத்துச் சர்ச்சைக்கு ஆளாக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்களாம்.

அதனால், ஐஸ்வர்யா ராய்க்காக நடிகை சொர்ணமால்யா பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சின்மயி, வைரமுத்துவின் மீது புகார் சொல்லி அது மிகப்பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அதன் காரணமாக தமிழின் முக்கியமான வரலாற்றுப் புதினம் படமாகும்போது அதில் பாடல் எழுதும் வாய்ப்பை இழந்தார் வைரமுத்து.

வைரமுத்துவின் வாய்ப்பைப் பறித்த சின்மயிக்கும் இப்போது அதே நிலை ஏற்பட்டுள்ளது. கெடுவான் கேடு நினைப்பான் என்ற சொல்லுக்கு ஏற்ப இந்நிகழ்வு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.