மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட நடிகை ‘மெட்டி ஒலி’ உமா இன்று சற்றுமுன்னர் உடல்நலக்குரைவால் காலமானார்.

மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற சீரியல்களிலும், படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்க முடியவில்லை. விஜய் டி.வி-யின் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் வந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,ஒரு கட்டத்தில் சீரியல், சினிமா என பிஸியா இருந்தேன். நான் நடிச்ச ‘மெட்டி ஒலி’ சீரியல் பெரிய ரீச் கொடுத்துச்சு. கடைசியா, ‘மஞ்சள் மகிமை’ என்ற கொடுத்துச்சு. நடிச்சேன். அதுக்கப்புறம் திருமணமாச்சு. நடிப்புக்கு பிரேக் விடப்போறேன்னு நானா சொன்னதில்லை. ஆனால், என்ன காரணமோ எந்த வாய்ப்பும் வரலை. போன வருஷம் சின்னத்திரை எலெக்‌ஷனில் கலந்துகிட்டேன். அப்போ, பலரும் நான் திரும்ப வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலைங்க’! என்று ஆதங்கப்பட்டிருந்தார்.

R

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.