தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பிற மொழி ரசிகளிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்திலிருந்து சுமார் அரை மணி நேரக் காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட். ஆனாலும் இந்தப் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு சற்று குறைவாக இருப்பதாக கருத்து எழுந்தது. அதற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையே காரில் நடைபெறும் ரொமான்ஸ் காட்சி உட்பட சில கசமுசா காட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் காட்சிகளிம் வடிவமைப்பும் வசனமும் வடிவமைப்பும் ஆபாசமாக இருந்ததால் அக்காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படம் 3 மணி நேரம் 5 நிமிடம் ஓடுவதால் சிறு தொய்வை ஏற்படுத்துவதாகவும் கருத்துகள் எழவே கார் சீனுடன் இன்னும் சில காட்சிகளும் நேரம் கருதி நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை. நாளை டிசம்பர் 20 முதல் காட்சிகள் நீக்கப்பட்ட வெர்சன் திரைப்படம் திரையரங்குகளில் காட்சிக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ‘புஷ்பா’பார்ட் 2 படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால் படத்தின் ரிலீஸை சுமார் ஆறு மாதங்களுக்காவது தாமதப்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.