மலேசியாவில்  ‘பிச்சைக்காரன் 2′ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

அங்குள்ள லங்கா தீவில் கடலில் ஜெட் ஸ்கீ என்ற நீரில் வேகமாகச் செல்லும் பைக் வாகனத்தை படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக இன்னொரு படகில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, வாய்ப்பகுதி சேதம் அடைந்து, பற்கள் உடைந்துள்ளன. மயக்கமடைந்து தண்ணீருக்குள் மூழ்க போன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மலேசியா விரைந்தனர்.

தற்போதுஅவரது உடல்நிலை தற்போது தேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து சென்னை வந்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இதையடுத்து விஜய் ஆண்டனி சென்னையில் பிரபல ஆஸ்பத்திரியில் வாய்ப்பகுதியில் அறுவை சிகிச்சையும், முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரியும் செய்ய அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல இருநாட்கள் முன்பு, சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான படப்பிடிப்புத் தளத்தில் வெப்பம் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றபோது , பணியில் இருந்த கேமராமேன் குமார் கிரேனில் இருந்து விழுந்து மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

தமிழ்ச் சினிமாவுக்கு போதாத காலம் இது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds