இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் நீ ஃபார் எவர் (Nee Forever)

இன்றைய தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும்,அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான்,இப்படத்தின் கதை.அனைத்து தரப்பு இரசிகர்களும் இரசிக்கும்படி, காமெடி,ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கு இசை: அஸ்வின் ஹேமந்த்,
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி,படத்தொகுப்பு: எஸ்.ஏ.நாகார்ஜுன்,கலை இயக்கம: வர்ணாலயா ஜெகதீசன்,ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்
ஒப்பனை: கலைவாணி பாலன்,பாடலாசிரியர்: கு.கார்த்திக்ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நடைபெற்றது.

YouTube player

இந்நிகழ்வினில்..

படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது…,

இந்தபடத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தமாதிரி நல்ல ஒருபடத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம்.முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்தபடத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும்,என் நண்பர் மற்றும் இயக்குநர் அசோக்குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி.இந்தபடத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார்.நாங்கள் இந்தபடத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி,நல்லமுறையில் எடுத்திருக்கிறோம்.இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது.பல சவால்களை சமாளிக்கவும்,படத்தை நல்லநிலைக்கு கொண்டுவரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..,

இந்தபடத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார்,இயக்குநர் அசோக் மற்றும் முழுகுழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம்.இந்தபடத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும்.இயக்குநர் அசோக் இந்தபடத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்தநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்தபடம் நல்லவெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,

முதலில் இந்தவாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தபடம் எங்களுக்கு சுமார் இரண்டுவருட பயணம். நாங்கள் ஒரு சிறியகுழுவாக பெரியகனவுடன் இந்தபடத்தை உருவாக்கியிருக்கோம்.நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால்,இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது.நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா,சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.தொழில்நுட்பக் குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்தபடத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது.இது ஒரு புதிய கான்செப்ட்டுடன்,புதியஅனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து,உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள்.நன்றி என்றார்.

டாக்டர் வித்யா பேசியதாவது..,

இந்தபடம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன்.பொள்ளாச்சியில் ஒரு பத்துநாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக்கதை.இளம்தலைமுறைக்கும்,பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.ஒய்.ஜி.மகேந்திரன் சார், நிழல்கள்ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலைசெய்தது மிகவும் மகிழ்ச்சி.இந்தபடம் பெரியவெற்றி பெறவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.

நடிகை சினேகா சக்தி பேசியதாவது..,

இந்தபடத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார்,ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தபடத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்தபடத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.நடிகர்கள் சுதர்ஷன்,அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழுகுழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார்.என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி என்றார்.

பாடலாசிரியர் கு.கார்த்திக் பேசியதாவது..,

இந்தபடம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வுதரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம்தலைமுறைக்கான,புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது.இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், இரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது.பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இயக்குநர் அசோக் முதல்படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.பாடிய நிஷாந்த்,விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்.தயாரிப்பாளர், இயக்குநர்,இசையமைப்பாளர் மற்றும் முழுகுழுவினருக்கும் என் நன்றி.எல்லாரும் திரையரங்கில் வந்து இந்தபடத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,

நான் பிரதோஷ்.இந்தபடத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தபடம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்தபடம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.நடிகர்கள் சுதர்ஷன்,அர்ச்சனா, சினேகா மற்றும் முழுகுழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள்.இந்தபடம் காதல்,நகைச்சுவை, குடும்பஉணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.எல்லா தலைமுறையினரும் இரசிக்கக்கூடியதாக இருக்கும்.அனைவரும் திரையரங்கில் வந்து இந்தபடத்தை பார்த்து ஆதரிக்கவும்.நன்றி என்றார்.

நடிகர் ஹரி பாஸ்கர் பேசியதாவது..,

இந்த அழகான படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாகவும்,புதுமையாகவும் இருந்தது.குறைந்த நாட்களில் எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படத்தை அழகாக உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.புகழ் சார் ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து,மிகுந்த ஆர்வத்துடன் நல்லபடங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு.இந்தபடம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.

தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..,

இந்தபடத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.தயாரிப்பாளர் புகழ் சார் இந்தபடத்தை மிகவும் அழகாகவும்,சீராகவும் தயாரித்திருக்கிறார்.அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது.இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது.இந்தபடம் பெரியவெற்றி பெறவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.மேலும் புகழ் சார் தமிழ்சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயரவேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி என்றார்.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது..,

இந்தபடத்தின் டிரெய்லரும் பாடல்களும் பார்த்தபோது, தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு முயற்சியாக தெரிகிறது.மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இந்தநிகழ்ச்சி மற்றும் படைப்பு அமைந்துள்ளது.தயாரிப்பாளர் புகழ் சார் மிகவும் எளிமையான,அர்ப்பணிப்புள்ள மனிதர்.அவருடைய முயற்சி இந்தபடத்தில் தெளிவாக தெரிகிறது.இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்தபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.இந்தபடம் ஒரு பெரியவெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும்,நல்லகதைகளும் தொடர்ந்து வரவேண்டும் என்பதே என் விருப்பம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக,இந்தபடத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்லபடத்தை கொண்டு வந்திருக்கிறார்.இயக்குநர் அசோக் மற்றும் முழுகுழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள்.இந்தபடம் பெரியவெற்றி பெறும் என்று நம்புகிறேன்.நடிகர்கள் சுதர்ஷன்,அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும்,நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்லபடங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும்.அப்போதுதான் இந்ததுறை வளர்ச்சி அடையும்.இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது.நல்லபடமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள்.அதை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.தமிழ்சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும்,நல்லவிஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்கவேண்டும்.இன்றைய சினிமா சூழலில் நல்லபடங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும்.அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும்.எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது..,

முதலில் இறைவனுக்கு என் நன்றி.இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.சமீபகாலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம்.இந்தப் படக்குழு ஒரு வெற்றிகுழு என்று நான் நம்புகிறேன்.இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது.நல்லகதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள்.இந்தபடம் இளைஞர்களை நிச்சயமாக கவரும்.பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்தபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.நல்லகதை இருந்தால் சிறிய படங்களும் பெரியவெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும்.இசை,ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.இந்தபடம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி என்றார்.

நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..,

எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒருநாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்தவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.பலவருடங்களாக காத்திருந்த இந்தவாய்ப்பு இந்தப்படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது.சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை,விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன்தான்.2024 பிப்ரவரியில் இந்தபயணம் தொடங்கியது.வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது ஒரு அழைப்பு வந்தது.ஒரு தயாரிப்பாளர் புதியமுகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள்.அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.
முதல்முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்தபோது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன்.ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது.சென்னை வந்து கதை கேட்டேன்,மிகவும் பிடித்தது.நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர்.ஒருநாள் அந்ததோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார்.ஆனால் இந்தகுழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது.இந்தவாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒருநாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும்.இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..,

இந்தபடம் எனக்கு ஒரு கனவு மாதிரி.இந்தகதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது.பாடல்கள்,காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது.இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து,என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார்.படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலைசெய்தது மிகவும் மகிழ்ச்சி.தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள்.எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து,சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள்.இந்தபடத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்லஅனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்லநண்பராக இருந்தார்.பல சவால்களை கடந்து உருவான இந்த படம்,மார்ச் 27 அன்று வெளியாகிறது.அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி என்றார்.

இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..,

இங்கே வந்துள்ள பத்திரிகை,சமூகவலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்றுதான் – ஒரு நல்லவிஷயம் செய்ய நினைத்தால்,அது கண்டிப்பாக நடக்கும்.இந்தபடம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்னசின்ன முயற்சிகள் செய்தேன்.அதன்மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.இந்தபடத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார்.நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார்,நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது,நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார்.எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார்.அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.படம் கண்டிப்பாக இரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்தமுயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி என்றார்.

தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..,

இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்லஎண்ணம் இருந்தா நல்லவிஷயம் நடக்கும்.இந்தபடம் அதற்கான ஒரு உதாரணம்.கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்துவிடலாம் என திட்டமிட்டிருந்தேன்.அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை,அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல்.ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி,படக்குழுவினரின் கடும்உழைப்பால் இப்படம் உருவானது.இந்தபடம் உருவாகும்போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது.ஆனாலும் அந்த சாவால்களை கடந்து,இந்தபடத்தை ஒரு நல்லபடமாக கொண்டு வந்திருக்கிறோம்.முதலில் வேறு நடிகர்கள்தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர்.ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள்.மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார்.அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர்.இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது.இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.