kamal-suhasini-maniratnam1

கடந்த 1987-ல் வெளிவந்த,இளையராஜா, மணிரத்னம்,கமல் கூட்டணியின் ‘நாயகன்’ 25 ஆண்டுகள் பூர்த்தி செய்ததைத்தொடர்ந்து, ‘நாயகன்’ பட நினைவுகளைக் கிளறி, பின்னர், ’அதற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன்’ முக்தா சீனிவாசன் மிரட்டியதால் அலறி அடித்துக்கொண்டு அலையும் கமல்,

உண்மையில் மணியாரின் கவனத்தைக் கவரவே அப்படி ஒரு பதிவை எழுதினாராம்.

அதையடுத்து ராஜ்கமல் காம்பவுண்டிலிருந்து ’கமலும்,மணியும் இணைகிறார்கள்’ என்று ஒரு செய்தியை காற்றில் பறக்கவிட்டு, அதுபற்றி விசாரித்தவர்களிடம் ‘யெஸ் யுவர் ஆனர். சமீபகாலமாக நானும் மணியும் இது தொடர்பாக மணிக்கணக்கில் பேசி வருகிறோம்’ என்று பதிலும் சொல்லிவந்தார் கமல்.

அந்த செய்திகளைப் படித்து, சித்தப்பாவும் கணவரும் ஒரு சிங்கிள் படத்தில் மிங்கிள் ஆவதை ஏனோ விரும்பாத சுஹாசினி, அந்த செய்திகளை மறுப்பதோடு, ’இப்போது மட்டுமல்ல, எப்போதுமே மணியும், கமல் மாமணியும் இணைய வாய்ப்பே இல்லை. அவர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் வேலை செய்யும் மன நிலையை தாண்டி வந்து விட்டார்கள்’ என்று ஜோஸியமும் ,ஹாஸ்யமுமாகக் கூறுகிறார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.