ஒரு வழியா… அண்ணன் தன்னோட எடத்த கண்டுபிடிச்சிட்டார்…. வாழ்த்துகள் ராதாரவி அண்ணே…

இதப்பார்த்ததும் சிந்தனை அப்புடியே ஒரு பதினைந்து வருஷம் பின்னாடி போச்சு… 2005-06 நு நினைக்கிறேன்… எல்லா அரசியல் பேச்சாளர்களையும் தேடித்தேடி கேட்டுக்கொண்டு இருந்த காலம்… கீழ்பாக்கம்,டைலர்ஸ் சாலையில் இருக்கும் “DBICA” நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளரா இருந்த அய்யா கெங்கைகுமாரும் ( Gengai kumar ) நானும் இரவு 9 மணி போல் டைலர்ஸ் ரோட்டில் வந்துகொண்டிருந்த போது… அப்போது
ஆட்சியில் இருந்த அதிமுக பொதுக்கூட்டம் களைகட்டியது… யாரு சிறப்பு அழைப்பாளர்னு கேட்டதுக்கு அய்யாதான்… “ராதாரவிதான் பேசுறான்னு போஸ்டர் பார்த்தேனு” சொல்ல … அதுவரை அவர் பேச்ச கேட்காத நான்.. கொஞ்சம் சபலப்பட்டு… நின்னு கேப்போமானு சொல்லும்போது ,ஒரு பெரும் படையோடு வந்து இறங்கினார் அண்ணன் ராதாரவி… கொஞ்சம் தள்ளாடியபடி மேடையேறியவர்… மைக்கை எடுத்து நடு மேடையில் நிறுத்தினார்…. என்னோட வற்புறுத்தலால் அய்யாவும் என்னோடு வந்து… அங்கு இருந்த சேர்ல உட்கார்ந்தோம்… மொத்தமா ஒரு 200 பேர் இருந்திருப்போம்… தொண்டையை கனைத்தபடி தொடங்கிய அண்ணன் … சம்பிரதாய பேச்சுக்கு முன்பு… “” என் பேச்ச கேட்க புடிக்காதவன்லாம் இப்பவே எழுந்து போயிடு…. நடுவுல போனா எனக்கு புடிக்காது…. ஆனா எழுந்து போறவன்லாம் கருணாநிதிக்கு பொறந்தவன்…. “” அப்புடினு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டு… அவர்களேக்கு போயிட்டாரு…. வேற வழியேயில்லாம முழு உரையையும்!!!! கேட்டுட்டுதேன் வந்தோம்… ஒன்னுக்கு வந்து எழுந்துபோக கூட எல்லோருக்கும் பயம்… எழுந்துபோனா எங்க… ” கருணாநிதிக்கு பொறந்தவன் எழுந்து போறான்னு”” கத்திடுவாரோனு அடக்கிட்டு இருந்து எழுந்து வந்தோம்… பாஜக கூட்டத்தில் அண்ணன் பேசப்போறத கேட்க தயாராவோம் நண்பர்களே…

சேர்ல போயி உட்காராம ……

முகநூலில்…ரத்ன செந்தில்குமார்.

Related Images: