தமிழ்,தெலுங்கு மொழிப்படங்களில் பிசியாக இருந்த நடிகை தமன்னா கைவசம் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் விகடன் நிறுவனம் தயரிக்கும் ஒரு வெப் சீரியலில் நடிக்கத்துவங்கியிருக்கிறார். த நவம்பர் ஸ்டோரி என்ற சீரியலின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகைகள் அமலா பால், மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தற்போது புதிய எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை தமன்னா. தமிழில் சுத்தமாக படமே இல்லை. தெலுங்கில் ஏற்கனவே நடித்து முடித்து இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் ‘தேட் இஸ் மகாலட்சுமி’தவிர்த்து தமன்னாவின் கைவசம் இருப்பது ஒரே ஒரு இந்திப் படம் மட்டுமே.

இந்நிலையில் இனியும் படங்களுக்குக் காத்திருப்பது வேலைக்காகாது என்று முடிவெடுத்த அவர் ஆனந்த விகடன் நிறுவனம் தயாரிக்கும் த நவம்பர் ஸ்டோரி வெப் சீரியலில் நடிக்கத்துவங்கி முதல் ஷெட்யூலையும் முடித்துவிட்டார். ராட்சசன் இயக்குநர் ராம் குமாரின் உதவியாளர் ராம் சுப்பிரமணீயன் இயக்கும் இத்தொடரில் இயக்குநர் ஜி.எம்.குமார், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இத்தொடரில் நடிக்க அவர் சுமார் 2 கோடி சம்பளம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தொடர் அமேஸானில் விரைவில் வெளியாகும்.

Related Images: