இந்த கொரோனா அழிவில் கிராமப்புறங்களிலும் ஆர்.எஸ்.எஸ் மக்களை வீடுவீடாக சந்திக்கின்றன.

கபசுரகுடிநீர் தருவதாக சொல்லி சிங்கம்புணரி மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லும் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள் அங்குள்ள மக்களிடம் ‘ இந்நோய் முஸ்லீம்களால் பரவியது என்றும், இதை விரட்டுவதற்காக சுலோகங்களைச் சொல்லலாம்’ என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சுலோகத்தை அவர்கள் சொல்லும் போது ஆண்கள் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டுமென்றும், பெண்கள் வீட்டில் இருந்து வெளியே நிற்கவேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார்கள்.

மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் அவரது சாதிக்காரரையே அனுப்பி, அச்சாதியினரை பாதுகாக்கவே ஆர்.எஸ்.எஸ் வேலை செய்கிறது எனவும், நோய் பரப்பும் முஸ்லீம்களை தாங்கள் தடுப்பதாகவும் வீடுவீடாக பிரச்சாரம் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் மிகப்பெரும் மதவெறியாட்டத்தை அரங்கேற்றவே இந்தக் கடையடைப்பை இந்த அரசுகள் நடத்துகின்றனவா?..

இந்த சமூகவிரோதிகளை, கொலைகாரக் கூட்டத்தினை வளர்த்தெடுக்கவா இந்த அரசு செயல்படுகிறது?.

தமிழகத்தின் பிரதான கட்சிகள் இப்பொழுதாவது இது குறித்துப் பேசவில்லையெனில் வரும் தேர்தலில் என்ன விளைவை அறுவடை செய்யப் போகிறீர்கள் என்பது புரியவில்லையா?..

ஒருபுறம் இந்துத்துவ கும்பல்களின் போலி சமூகவளை தளம் மிக வேகமாகவும், வலிமையான ஆற்றலுடன் செயலாற்றி வருகிறது. பொய்ச் செய்திகளை பரப்புகிறது. பாஜக தலைவர்கள் பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்.

கொரொனோவைவிட இந்தக் கிருமிகளையே நாம் போர்க்குணத்துடன் எதிர்த்து நிற்கவேண்டும். அனைத்து தோழமைகளும் தங்களது ஊர், தெரு, பகுதிகளில் நடமாடும் இந்துத்துவ வெறியர்களிடம் இருந்து மக்கள் பாதுகாக்க, இந்தக் கொலை வெறிக்கும்பலைப் பற்றி சகமக்களிடம் தெரியப்படுத்துங்கள்.

கொரொனோ, இந்துத்துவ சக்திகள் எனும் இத இரண்டில் சங்கிகளே மிக மிக ஆபத்தானவர்கள்.

— முகநூலில் திருமுருகன் காந்தி.

மே 17 இயக்கம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.