‘தள்ளிப் போகாதே’ என்று எந்த நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ அப்படம் மீண்டும் மீண்டும் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது..

அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினங்களைக் கணக்கில் கொண்டு ‘அரண்மனை 3’, ‘ராஜவம்சம்’, ‘தள்ளிப் போகாதே’ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. ஆனால், இப்போது ‘அரண்மனை 3’ மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதனால், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘தள்ளிப் போகாதே’ ஆகிய படங்கள் தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன. புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவுள்ளார்கள்.

இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது, திரையரங்குகள் குறைவாகக் கிடைத்ததுதான் காரணம் என்றார்கள். குறிப்பாக ‘டாக்டர்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் படம் இரண்டாவது வாரத்தில் கூட சுமார் 50% திரையரங்குகளில் திரையிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் ‘அரண்மனை 3’ படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவிடாமல் மொத்த தியேட்டர்களையும் கபளீகரம் செய்துள்ளனர்.

இந்த இரண்டு படங்கள் போக, ஹாலிவுட் படமான ‘வெனம்’ வெளியாகிறது. அதற்கும் சில திரையரங்குகள் கிடைக்கும். இவை மூன்றையும் தாண்டி ‘ராஜவம்சம்’, ‘தள்ளிப் போகாதே’ ஆகிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆகையால், இரண்டு படங்களுமே தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்துவிட்டன. இவை இரண்டுமே பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.