‘அறம்’படத்தின் இயக்குநர் கோபி நயினார் தனது 47 வது பிறந்தநாளை சிறுமலை படப்பிடிப்பு தளத்தில் இன்று எளிமையாகக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அவரது படப்பிடிப்பு குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கதையின் நாயகியாகக்கொண்டு கோபிநயினார் இயக்கிய ‘அறம்’படம் மக்களாலும் விமர்சகர்களாலும் ஒரு சேரக் கொண்டாடப்பட்ட படம்.

அப்படத்துக்குப் பின்னர் தற்போது நடிகை ஆண்ட்ரியா ஜெரமியாவை கதையின் நாயகியாகக்கொண்டு கோபி நயினார் புதிய படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத அப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்கிற விபரம் கூட என்ன காரணத்தாலோ இதுவரை வெளியிடப்படவில்லை.

 

ஆனால் இன்று கோபி நயினாரின் பிறந்தநாளை ஒட்டி, அதே சிறுமலை லொகேஷனில் தனது ‘விடுதலை’படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவுடன் படத்தின் தயாரிப்பாளர் அநேகமாக அவராகவே இருக்கக்கூடும் என்று தெரிகிறது. அடுத்த சர்ப்ரைஸாக ‘விடுதலை’ பட நாயகன் விஜய் சேதுபதியும் திடீர் விசிட் அடித்து கோபி நயினார்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவருக்கு கேக் ஊட்டிவிட்டார்.

‘அறம்’ போலவே மற்றுமொரு தரம் வாய்ந்த படம் வழங்க இப்பிறந்தநாளை ஒட்டி இயக்குநர் கோபி நயினாருக்கு பிரஷர் போடுவோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds