WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts
WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]SELECT SQL_CALC_FOUND_ROWS all
FROM 4bz_posts
WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish')))
ORDER BY 4bz_posts.post_date DESC
LIMIT 0, 15

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் காவல்துறை ஏன் எடப்பாடியையும் , சசிகலாவையும் விசாரிக்க விரும்புகிறது என்பதை விளக்கி பதிலளிக்க, உயர் நீதிமன்றம் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் அப்போது வழக்குப்பதிவு செய்யப்படது.
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகவும் எனவே மறுவிசாரணை செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அறையில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் தனது மனுவில் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நீலகிரி நீதிமன்றத்தில் வழக்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரவுள்ளதால், இந்த மனு தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்